Friday, November 25, 2011

புத்திர பாக்கியம்

 புத்திரஸ்தானம் என்பது ஒரு ஜாதகத்தில் 5 வது இடத்தை குறிப்பது ஆகும்.இந்த இடம் சுத்தமாக இருத்தல் அவசியம்.யாதொரு பாவ கிரகங்களின் சேர்க்கையோ ,பார்வையோ இருத்தல் கூடாது.புத்திரகாரகனான குரூபார்வையோ,லக்னாதிபதி பார்வையோ பெற்றிருத்தல் அவசியம். சுபகிரகங்கள் இடம்பெறலாம்.வியாழன் தனித்து இடம்பெற்றிருக்கக் கூடாது. அலி கிரகங்கள் புதன்,சனி,யாருடனும்  சேராமல்,அல்லது பார்வை பெறாமல் அமர்ந்திருத்தல் ஆகாது.ராகு,கேது இருந்தால் தோஷம் ஏற்படும்.சுபர் பார்வை இருந்தால் மட்டுப்படும்.எது எப்படி இருந்தாலும் .கர்ம ஸ்தானமான10  வது இடமோ ,அதன் அதிபதியோ  பலத்துடன்,லக்னாதிபதி ,அல்லது வியாழன் பார்வைபெற்றிருந்தால் கர்மபுத்திர பாக்கியம் பிற்பகுதியில் உண்டு. செவ்வாய் ,சூர்யன், வியாழன் ஆண் மகவை நிர்ணயிக்கும். சந்திரன்,சுக்கிரன் பெண் மகவை நிர்ணயம் செய்யும்.




கோதைதனபாலன்.

Monday, November 21, 2011

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம் என்பது ஒரு திருமண ஜாதகத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இது பொதுவாக தாமத திருமணத்தை ஏற்படுத்தும்.  லக்னம்,2 , 4,7,8,10,12  ம இடங்களில் செவ்வாய் நின்றால்  ஏற்படுவது.சுபர்கள் பார்வை பெற்றிருப்பின் தோஷம் மட்டுப்படும். இக்கிரகம் தன வலு குறைந்திருத்தல் கூடாது. உச்சம் ,நீசம் ,  பெற்றிருந்தால் பரிகார தோஷம் எனப்படும். 7,8  க்கு உரியவனாக ஆட்சி பெறுதலும் பரிகாரமாம். இருவர் ஜாதகத்திலும் ஒன்றே போன்ற இடத்தில் இருப்பதாக இருந்தால் நன்மை. பொது      சுபராய்  வியாழன் பார்க்க நலமே பயக்கும்.


கோதைதனபாலன்.

Saturday, November 5, 2011

சனி தரும் பலன்

சனி பகவானுக்கு நீதிமான்என்ற பெயர் உண்டு .இவர் யோகராக அமைந்த பட்சத்தில் அவர் திசையில் ,புத்தியில் அவர் அளித்ததை யாராலும் பிடுங்கிவிட முடியாது. பாவராக அமைந்திடின் அவர் தரும் அழிவை பொறுப்பது கஷ்டம் ,  சுபர் பார்த்திருப்பின் தண்டித்து கரை சேர்ப்பார்.  குருவுக்கு நிகர் பலமுள்ளவர்.    பொதுச்சுபராகவோ  , யோகராகவோகுரு சனியை பார்த்திருந்தால் தன்மைக்கேற்ப செயலாக்கம் மட்டுப்படும்.  அஷ்டமா ஸ்தானத்தில் சனி வலுத்திருந்தால் ஆயுள் தீர்க்கம் உண்டு .  ஆனால் காரியத்தடைகள் அதிகம் ஏற்படுத்துவார்.  சனி பார்த்த சந்திரன் திசைகளில் காரிய துரிதம் இருக்கும் . ஏழரை சனி என்ற அதிகார பலம் இவர் ஒருவருக்கே உண்டு. கழிவு சனியில் எந்தவிதத்திலாவது நன்மை செய்துதான் செல்வார் .   மூன்று சுற்று ஏழரைசனி காண்பவரும் உண்டு. ஏழரையில் சுப்பர் பலன் , பார்வை பெற்றிருந்தால்  கடுமை குறையும்.  திசா புத்தி நாதனை மீறி செய்யுதல் முடியாது. சனி பிறந்த ஜாதகத்தில் வலு பெற்றிருந்தால் சோதனை கொடுத்தே நல்லது செய்வார்.   வலு குறைந்திருப்பின்  சோதனைகள் கடுமையாகும். சனி குருபார்வை இல்லாது தனி உன்னத வலு பெற்றிருந்தால் சுய சம்பாத்திய தேடல் அளிப்பார். குரு பார்த்திருந்தால் கோடிஸ்வரனாயினும்  உத்தியோகம் பார்த்துதான் ஆக வேண்டும். மூதாதையர்களுக்கு இவர் கிழமைகளில் விரதம் இருப்பது நன்று.

 கோதைதனபாலன்.