Monday, June 4, 2012

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியில் அனைவருக்கும் சில எதிர்பார்ப்புகள்
இருக்கக் கூடும்.அதற்க்கு முன்னர் குருவின் தன்மைகளைத்
தெரிந்துகொள்வது நல்லது.பொதுவாக குரு எனப்படும் வியாழ பகவான்
அனைவருக்கும் பொதுவில் சுப்பர் எனச் சொல்வதுண்டு.ஆனால் ரிஷபம்,
துலா ராசிக...
ாரர்களுக்கு பாபர் ஆவார்.மிதுன,கன்னி போன்ற உபய ராசிகாரர்களுக்கு
மாரகஸ்தான அதிபதி என்ற அமைப்பில் நல்லது செய்யாமல் இருப்பார் .
சுமார் ஒன்றரை ஆண்டுக்கொருமுறை ராசி மாறுவார்.வக்ரகதி அமைப்பு இவருக்கும் உண்டு.
புத்திரகாரகனான இவர் தனித்து அந்த ஐந்தாமிடத்தில்யாதொரு துணையுமோ, பார்வையுமோ
இல்லாதிருந்தால் பலனளிக்க மாட்டார்.பொதுவாக இவர் மந்தமாக செய்யல படுபவர்.
யாரொருவர தூண்டுதலிலே காரியமாற்றுவார். தான் பார்வை செய்யும் இடத்தை
அந்தந்த இடத்தின் தன்மைக்கேற்ப பலன்களை சற்றுமாற்றித் தரக் கூடிய வல்லமை உடையவர்.
ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் பார்வை இவருக்கு உண்டு.கேந்திர இடங்களில் ஒன்று,நான்கு,ஏழு,பத்தாம்
இடத்தில் இவர் சுபராக நின்றால் கேந்திர தோஷம் ஏற்ப்பட்டு பலன் மட்டுப்படும்.அதுவே அது ஆட்சி
பெற்ற வீடாயிருக்கும் பட்சத்தில் கேந்திராதிபத்திய தோஷம் கடுமையாக ஏற்படும்.ராசியிலும்,
அம்சத்திலும் ஒரே வீட்டில் வீற்றிருந்தால் வர்கோத்தமம் அமைப்பில் வலு பெறுகிறார்.
கடகம் உச்சவீடு.மகரம் நீச வீடு. தனுசு,மீனம் ஆட்சி வீடு.புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
நட்சத்திரங்களுக்கு இவர் அதிபதி.ராசிக்கு ஏழு,எட்டு, பதினொன்றாம் இடத்தில் வருங்காலத்து
திருமண யோகங்களைஅளிக்கக் கூடியவர்.இவர்சுபராய் ஐந்திலோ,அல்லது கேதுவோடு இணைய
சந்திரனும் நன்கமைய பிறந்தவர் அறக் கட்டளைகளில் ஈடுபடுவர்.

No comments:

Post a Comment