திருமண காலங்கள்..!
சிலருக்கு சரியான பருவத்தில் திருமணம் நிறைவேறும் .
சிலருக்கு தள்ளிப் போகும்.எதுவும் நல்லதற்கே என்று
நாம் கருத்தில் எடுத்துக் கொண்டாலும் சில விஷயங்களை
கவனத்தில் கொள்ளுதல் முறையன்றோ.? பொதுவாக
பாவதோஷம்,செவ்வாய் தோஷம் உடைய வர்களுக்கு தாமத
திருமணம் நலமே. கிரஹா அமைப்பில் எந்த தோஷமும் இல்லைஎன்றாலும்
தசா புத்தி காரணமாய் தாமதப் படுதலும் உண்டு, திருமணம் நடக்க கோச்சார ரீதியில்
குருவான சுபர் ஏழு, எட்டு,பதினொன்றமிடம் பனிரண்டாம் இடம்
இவற்றில் ஒன்றை பார்த்திருத்தல் வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சுக்கிரன்
பலமே இல்லாது ,ஏழு, எட்டும் வலுவின்றி இருந்தால்
திருமண யோகம் இல்லை. சிலருக்கு ஸ்தான பலம் இருந்தும்
சுக்கிரன் கெட்டோ அல்லது பாவருடன் இணைந்தோ இருக்க
தசா புத்தி துணை செய்யாவிடில் குழந்தை பாக்கியம் இருந்தும்
துணைவருடன் கூடி வாழும் யோகம் இருக்காது. பொதுவான தடைகள்
உள்ள சாதகர்கள் திருமணஞ்சேரி சென்றுவர திருமணங்கள் கைகூடுவது
உண்மையான நிலையாக உள்ளது.


No comments:
Post a Comment